Published : 30 Nov 2019 12:04 PM
Last Updated : 30 Nov 2019 12:04 PM

பள்ளிக்கல்வித் துறையில் 3 இயக்குநர்கள் திடீர் பணியிட மாற்றம்

சென்னை

பள்ளிக்கல்வித் துறையில் 3 இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஆணையை பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் நேற்று வெளியிட்டார்.

பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியில் இருந்து ராமேஸ்வர முருகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக கண்ணப்பன் நியமிக்கப்பட்டார். அதேபோல தொடக்கக் கல்வித் துறை, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் ஆகியவற்றின் இயக்குநர்களும் மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது, பள்ளிக்கல்வித் துறையில் 3 இயக்குநர்களை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த பழனிச்சாமி அங்கிருந்து மாற்றப்பட்டு, தொடக்கக் கல்வித் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடக்கக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் சேதுராம வர்மா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநராக இருந்த உமா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x