Last Updated : 29 Nov, 2019 12:28 PM

 

Published : 29 Nov 2019 12:28 PM
Last Updated : 29 Nov 2019 12:28 PM

81 குழந்தைகளுக்கு 1 லிட்டர் பால்: பள்ளி மதிய உணவில் சர்ச்சை

சோன்பத்ரா

உத்தரப் பிரதேச பள்ளியில் மதிய உணவை அடுத்து 1 லிட்டர் பாலில் அதிக தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேவ் பாட்டியா கூறும்போது, சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சலைபன்வா அரசு தொடக்கப் பள்ளியில் ஒரு லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர் கலக்கப்பட்டுள்ளது. அது 81 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகத்தினர் 1 லிட்டர் பாலை மட்டுமே கொடுத்துள்ளனர். அதைக் கொண்டு மதிய உணவுக்குப் பிறகு பால் கொடுக்கப்பட்டது. கடந்த காலத்திலும் இதேபோன்று நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர் என்றார்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறும்போது, பள்ளியில் 171 மாணவர்கள் படிக்கின்றனர். சம்பவம் நடந்த அன்று, 81 பேர் வந்திருந்தனர். நான் இரண்டு பள்ளிகளைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது. இரு பள்ளிகளுக்கும் பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பள்ளிக்கு எவ்வளவு பால் வந்தது என்று என்னால் கண்காணிக்க முடியாது.

கிடைத்த பாலை, சமையலர் குழந்தைகளுக்குக் கொடுத்திருக்கிறார். அதை அவர்கள் குடித்தனர் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x