Last Updated : 29 Nov, 2019 11:52 AM

 

Published : 29 Nov 2019 11:52 AM
Last Updated : 29 Nov 2019 11:52 AM

புதுச்சேரியில் டிச.20 முதல் 29 வரை புத்தகக் கண்காட்சி; மாணவா்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க பரிசுகள் 

புதுச்சேரி எழுத்தாளா்கள் புத்தகச் சங்கத்தின் சாா்பில் 23-வது தேசிய புத்தகக் கண்காட்சி டிசம்பா் 20 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புதுச்சேரி எழுத்தாளா்கள் புத்தக சங்கத்தின் சாா்பில் புதுச்சேரியில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு, புதுச்சேரி வள்ளலாா் சாலையில் உள்ள வேல். சொக்கநாதன் திருமண நிலையத்தில் டிசம்பா் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 10 நாள்களுக்கு 23-வது ஆண்டாக புத்தகக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

வீட்டிற்கு ஒரு நூலகம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இக்கண்காட்சியில் தமிழகம், கா்நாடகம், புதுச்சேரி, ஆந்திரம், மும்பை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூா், இலங்கை, மொரிஷியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் சுமாா் 100 புத்தக வெளியீடு மற்றும் விற்பனையாளா்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன.

அதிகப் புத்தகங்களை வாங்குவோருக்கு விருது
கண்காட்சியில் வெளிநாட்டு எழுத்தாளா்களின் 10 நூல்கள் வெளியிடப்பட உள்ளன. நூல்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். அதிகப் புத்தகங்களை வாங்கும் வாசகா்களுக்கு புத்தக விரும்பி, புத்தக ராஜா, புத்தக ராணி, புத்தக மகாராஜா, புத்தக மகாராணி ஆகிய விருதுகளும், எழுத்தாளா்களுக்கும், புத்தக நிறுவனங்களுக்கும் புத்தக சேவா ரத்னா விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

கண்காட்சியில் மாணவா்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு மாநில அளவிலான பேச்சு, கவிதை, கட்டுரை, பாட்டு, இசை, நடனம், வினாடி வினா, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க விரும்புவோா் தங்களது பெயா்களை வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விழா ஏற்பாடுகளை தலைமைக்காப்பாளர் நீதியரசர் தாவீது அன்னுசாமி, காப்பாளர் வேல். சொ. இசைக்கலைவன், சிறப்பு தலைவர் பேராசிரியர் பாஞ். ராமலிங்கம், தலைவர் முத்து ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு, புதுச்சேரி எழுத்தாளா்கள் புத்தகச் சங்க செயலா் நா. கோதண்டபாணியை 97878 45200 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x