Published : 28 Nov 2019 03:02 PM
Last Updated : 28 Nov 2019 03:02 PM

சைனிக் பள்ளிகளில் மாணவிகள் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு

சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9-ம் வகுப்பில் சேருவதற்காக மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக இணையத்தில் மீண்டும் தளங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தியப் பாதுகாப்புப் படைகளான ராணுவம், கப்பற்படை, விமானப் படைகளில் உயர் நிலை அதிகாரிகளாய்த் தேர்ந்தெடுக்கப் படுவதற்காகச் சிறுபிராயத்தில் இருந்தே மாணவர்களைத் தயார்படுத்த மத்திய அரசாங்கத்தால் 1961-ல் சைனிக் பள்ளிகள் நிறுவப்பட்டன. இந்தியா முழுவதும் 28 சைனிக் பள்ளிகள் உள்ளன.

இதற்கிடையே பீஜப்பூர் (கர்நாடகா), சந்திரபூர் (மகாராஷ்டிரா), கோராக்கல் (உத்தரகாண்ட்), கலிகிரி (ஆந்திரப் பிரதேசம்), குடகு (கர்நாடகா) ஆகிய பகுதிகளில் உள்ள சைனிக் பள்ளிகளில் மாணவிகள் சேர டிசம்பர் 6, 2019 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சேர்க்கைக்கான விண்ணப்ப காலம் அக்.31-ம் தேதியுடன் முடிந்திருந்த நிலையில், மீண்டும் விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு வரும் ஜனவரி 5, 2020-ல் நடைபெற உள்ளது.

மாணவிகள் 6-ம் வகுப்பில் சேர, 10-ல் இருந்து 12 வயதுக்குள் இருக்க வேண்டும். 9-ம் வகுப்பில் சேர 13- இருந்து 15 வயதுக்குள் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட வயது மார்ச் 31, 2020 வரை பொருந்தும்.

இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேடு பெற பொதுப் பிரிவினர் ரூ.400-ம், எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ.250-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் sainikschooladmission.in என்ற முகவரியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்

மாணவர்கள் மட்டுமே படித்து வந்த சைனிக் ராணுவப் பள்ளியில், 2018-ம் கல்வியாண்டில் இருந்து மாணவிகளும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x