Published : 28 Nov 2019 07:57 AM
Last Updated : 28 Nov 2019 07:57 AM
மக்களவையில் அமைச்சர் பியூஷ் கோயால் கூறும்போது, “ரயில்வே பாதுகாப்பு பணியில் 2300-க்கும் மேற்பட்ட ஆர்பிஎப் பெண் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் தவிர ரயில்வே பாதுகாப்பு படையில் 4,078 பெண் காவலர்களும் 298 சப்-இன்ஸ்பெக்டர்ளும் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி பெற்று வருகின்றனர்.
ரயில்வே நிலையம் இருக்கும் வளாகங்கள் மற்றும் ஓடும் ரயில்களில் குற்றங்களை தடுப்பதும் மாநில அரசுகளின் பொறுப்பாகும்.
ஆனாலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநில அரசுகளின் ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) ரயில்வே பாதுகாப்பு படையினர் பணியாற்றி வருகின்றனர்” என்றார்.
தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “2018-19-ம் நிதியாண்டில் நடைமேடை டிக்கெட் விற்பனை மூலம் ரூ.139.20 கோடியும், விளம்பரங்கள், கடைகள் மூலம் ரூ.230.47 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. விளம்பரங்கள், கடைகளுக்கான தொகை வெளிப்படையான ஏலம் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT