Published : 27 Nov 2019 08:17 AM
Last Updated : 27 Nov 2019 08:17 AM
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா வில் 19-வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதை யுனிசெப் மற்றும் கொல்கத்தா திரைப்பட மையம் இணைந்து நடத்துகின்றன. ‘குழந்தைகளுக்கு எதிரான வன்முறை’ என்ற தலைப்பில் இந்த விழா நடத்தப்படுகிறது.
ஒரு மாதம் நடைபெற உள்ள இந்த விழாவில், 12 நாடுகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த குழந்தைத் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்தியாவில் குழந்தைகள் திரைப்படங்கள் போதிய அளவு வெளிவருவதில்லை. அதுபோன்ற திரைப்படங்கள்தான் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. குழந்தைகளுக்கு எதிராக எந்த வகையான வன்முறையாக இருந்தாலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT