Published : 25 Nov 2019 08:36 AM
Last Updated : 25 Nov 2019 08:36 AM

சிபிஎஸ்இ-ல் பிளஸ்1 படித்த மாணவர்கள் தமிழக பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதலாம்: கல்வித் துறை ஆலோசனை கூட்டத்தில் முடிவு 

தமிழக பள்ளிக் கல்வியின் பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு நடத்தப் படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 28 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தற்போது பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 1 தேர்வை பள்ளிகளே நடத்திக் கொள்ளும். ஆனால், தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப் படுகிறது. மேலும், பிளஸ் 1 தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மட்டுமே பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க முடியும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.

இதன் காரணமாக சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற வாரிய பள்ளிகளில் இருந்து மாறிவந்த மாணவர்கள் பலர் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறும்போது, ‘‘சிபி எஸ்இ பள்ளிகளில் பிளஸ் 1 படித்த மாணவர்கள் பலர் பல் வேறு சூழல்கள் காரணமாக தமி ழக பாடத் திட்டத்தில் பிளஸ் 2 சேர்ந்து படித்து வருகின்றனர். அவர்கள் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்க சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத் தில் முடிவானது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x