Published : 22 Nov 2019 08:11 AM
Last Updated : 22 Nov 2019 08:11 AM

அமெரிக்காவில் தொடங்கியது ஜெய்ப்பூர் காலணி திருவிழா

வாஷிங்டன்

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் கடந்த செப்டம்பர் மாதம்நடைபெற்ற ‘இந்தியா-பசிபிக் தீவுகள் வளரும் மாநிலத் தலைவர்கள் கூட்டத்தில்’ பிரதமர் மோடி உரையாற்றும்போது, ‘மனிதநேயத்திற்கான இந்தியா' திட்டத்தின் கீழ், பசிபிக் நாடுகளில் ஜெய்ப்பூர் காலணியின் செயற்கை கால்கள் பொருத்துவதற்கான முகாம் ஏற்பாடுசெய்யப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,‘மனிதநேயத்திற்கான இந்தியா’ திட்டத்தின் கீழ், ஜெய்ப்பூர் காலணிதிருவிழா அமெரிக்காவில் நடக்கவுள்ளதாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் புதன்கிழமை ‘ஜெய்ப்பூர் காலணி’ திருவிழா தொடங்கியது. ஜெய்ப்பூர் காலணி நிறுவனர் தேவேந்திர ராஜ் மேத்தா கூறுகையில், “நாங்கள் இதுவரை இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் 1.8 மில்லியன் மக்களுக்கு செயற்கை கால்களை வழங்கி மறுவாழ்வு கொடுத்துள்ளோம். இதுவரை33 நாடுகளில் 78 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x