Published : 21 Nov 2019 09:30 AM
Last Updated : 21 Nov 2019 09:30 AM
மஸ்கட்:
உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் ஓமன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வென்றது.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் நேற்று மஸ்கட்டில் நடந்த ஆட்டத்தில் இந்தியா - ஓமன் அணிகள் மோதின இப்போட்டியில் ஓமன் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இதில் ஓமன் வீரரான மோஷின் அல் கசானி, 33-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். இப்போட்டியில் தோற்றதன் மூலம் 2022-ம் ஆண்டில் நடக்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இந்திய அணியின் வாய்ப்பு மங்கியுள்ளது.
குவான்ஜி:
கொரியாவில் உள்ள குவான்ஜி நகரில், கொரிய ஓபன் பட்டத்துக்கான பாட்மிண்டன் போட்டி நடக்கிறது. இதில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங் வீரரான வாங் விங் வின்செண்டை எதிர்கொண்டார். 37 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில், காந்த் 21-18 21-17 என்ற நேர் செட்களில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரரான சமீர் வர்மா, ஜப்பானின் கசுமாசா சகாயை எதிர்கொண்டார் இப்போட்டியில் சமீர் வர்மா 11-8 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் இருந்தபோது,காயம் காரணமாக சகாய் வெளியேறினார். இதைத்தொடர்ந்து இப்போட்டியில் சமீர் வர்மா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT