Published : 21 Nov 2019 08:25 AM
Last Updated : 21 Nov 2019 08:25 AM

செய்திகள் சில வரிகளில்: முதல் தொழிட்நுட்ப ஜவுளி ‘ஹேக்கத்தான்’ மும்பையில் நாளை நடக்கிறது

55 புதிய பசுமை நிலக்கரி சுரங்கம் அமைக்க திட்டம்

புதுடெல்லி

நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் நேற்று கூறியதாவது:

நிலக்கரி இந்தியா நிறுவனத்தின் திட்டங்கள் போர்டல் அடிப்படையில் கண்காணிக்கப்படுகின்றன.

தற்போது உள்ள 193 பழுப்பு நிலக்கரி சுரங்கங்களில் இருந்து ஆண்டுக்கு 310 மில்லியன் டன் நிலக்கரி கிடைக்கிறது. 55 புதிய பசுமை நிலக்கரி திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம். இதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் 92 மில்லியன் டன் நிலக்கரி கூடுதலாக கிடைக்கும்.

காஷ்மீரில் அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் திறப்பு

புதுடெல்லி

மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் நேற்று கூறியதாவது:

காஷ்மீரில் தற்போது அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு, மாணவர்களின் வருகைப்பதிவு 98% உள்ளது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடந்ததேர்வில் 98% மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தொடக்கத்தில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்
பட்டு, மாணவர்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. மேலும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் என அனைத்து மருத்துவச் சேவைகளும் முழுமையாக செயல்படுகின்றன.-பிடிஐ

முதல் தொழிட்நுட்ப ஜவுளி ‘ஹேக்கத்தான்’ மும்பையில் நாளை நடக்கிறது

மும்பை: இந்தியாவின் முதல் தொழில்நுட்ப ஜவுளி ‘ஹேக்கத்தான்’ நிகழ்ச்சி மும்பையில் நாளை நடக்கவுள்ளது.

இதுகுறித்து நிகழ்ச்சியை நடத்தும் மெஸ்ஸி பிராங்பேர்ட்இந்தியா அமைப்பு வெளியிட்ட அறிக்கை: உற்பத்தி நிறுவனங்களின் சிறப்பு இழைகள், நூல்கள், ஜவுளி, துணிகள், பிராண்டுகள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும். சிறு, நடுத்தர தொழில்முனைவோர், சுற்றுச்சூழல் அமைப்பு ஆகிய தரப்புகளின் முன்னேற்றத்துக்கு இந்நிகழ்ச்சி பயன்படும்.

இந்திய ஜவுளித்துறையின் புதுமைகளை எடுத்துக்காட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x