Published : 19 Nov 2019 08:00 AM
Last Updated : 19 Nov 2019 08:00 AM

ஐ.நா வளர்ச்சிக்காக இந்தியா 13.5 மில்லியன் டாலர் நிதி

கோப்புப்படம்

நியுயார்க்

ஐநா வளர்ச்சி பணிக்கு 13.5 மில்லியன் டாலர் நிதியை இந்தியா வழங்கும் என்று இந்திய தூதரக அதிகாரி ஐ.நா பொதுக்கூட்டத்தில் உறுதியளித்தார்.

ஐக்கிய நாடுகளுக்கான சபையின் (ஐ.நா) வளர்ச்சி நடவடிக்கைக்கான பொதுக்கூட்டம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் கடந்த வாரம் முழுவதும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்தியா சார்பாக ஐநா அமைப்புக்கான இந்திய தூதரக அதிகாரியான அஞ்சனி குமார்கலந்து கொண்டார். ஐநா பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “2020-ம் ஆண்டில் ஐ.நா மேற்கொள்ளும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக 13.5 மில்லியன் அமெரிக்க டாலர்தருவதாக இந்தியா உறுதி அளித்துள்ளது.

அதில், ஐ.நா. நிவாரணம் மற்றும் பாலஸ்தீன அகதிகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டாலரும், ஐ.நா வின் வளர்ச்சி திட்டங்களுக்காக 4.5 மில்லியன் டாலரும், உலக உணவுதிட்டத்துக்கு 1.92 மில்லியன் டாலரும், குழந்தைகள் நிதிக்கு 9 லட்சம் அமெரிக்க டாலர், நிவாரண நிதிக்கு 5 மில்லியன் டாலர், மக்கள் தொகை கட்டுப்பாடு நிதிக்கு 5 லட்சம் டாலர், தன்னார்வ நிதிக்கு 2 லட்சம் டாலர், குடி அமர்வு திட்டத்துக்கு 1.50 லட்சம் டாலர் நிதி, தொழில்நுட்ப உதவிக்கு 1 லட்சம் டாலர் வழங்கப்படும்’’ என்றார்.

ஐ.நா வின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக, 516 மில்லியன் டாலர் பணம் வழங்கப்படும் என்று இந்த பொதுக்கூட்டத்தில் 16 நாடுகள் உறுதியளித்துள்ளது.

முன்னதாக கேரிகாம் நாடுகளின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 14 மில்லியன் டாலர் மானியமும், சூரிய சக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களுக்கான 150 மில்லியன் டாலர் கடன் வழங்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x