Published : 18 Nov 2019 12:14 PM
Last Updated : 18 Nov 2019 12:14 PM
பள்ளிகளில் முதல் முறையாக விர்ச்சுவல் வகுப்பறைகளைத் தொடங்கும் திட்டத்துக்கு உத்தரகாண்ட் முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக உத்தரகாண்ட் முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் கூறும்போது, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விர்ச்சுவல் வகுப்பறைகள் தொடங்கப்பட உள்ளன. இது நாட்டிலேயே முதல்முறையாக இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இதனால் மாநில அரசின் விர்ச்சுவல் வகுப்பறை திட்டத்துடன் 150 பள்ளிகள் இணைந்துள்ளன. மேலும் 350 பள்ளிகள் அடுத்த 15 நாட்களில் இந்தத் திட்டத்துடன் இணைக்கப்படும்.
இதன்மூலம் சுமார் 1.90 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். கல்வித் துறையில் எந்தவொரு நவீன தொழில்நுட்பமும் ஆசிரியர்களுக்கு மாற்றாக இருக்க முடியாது. எனினும் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக சிரமத்தை எதிர்கொள்ளும் பள்ளிகள், இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் பயன்பெறும் என்று தெரிவித்துள்ளார்.
புதிய திட்டத்தின்படி உத்தரகாண்டின் சில நகரங்களில் விர்ச்சுவல் வகுப்பறைகள் தொடங்கப்படுகின்றன. குறிப்பாக அல்மோராவில் 52, சமோலியில் 45, சம்பாவத்தில் 15 வகுப்பறைகள் தொடங்கப்பட உள்ளன.
அதேபோல டேராடூனில் 46, ஹரித்வாரில் 10, நைனிடாலில் 61, பவ்டியில் 82 வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பித்தோராகரில் 40, ருத்ரபிரயாக்கில் 21 மற்றும் தெஹ்ரியில் 52 விர்ச்சுவல் வகுப்பறைகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT