Published : 18 Nov 2019 10:13 AM
Last Updated : 18 Nov 2019 10:13 AM
சிவகங்கை அருகே பாகனேரியில் பழமையான நூலகத்தில் நூற்றாண்டுகள் கடந்த நூல்களைப் பார்த்து ஆச்சரியமடைந்த அரசு பள்ளி மாணவிகள் அந்நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். பாகனேரியைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன் என்பவரால் அப்பகுதியில் நூலகம் தொடங்கப்பட்டது.
அவர் அந்த நூலகத்துக்கு பழமையான 20 ஆயிரம் நூல்களை தானமாக வழங்கினார். அதில் பல நூல்கள் சென்னை நூலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.
தற்போது பாகனேரி நூலகத்தை நூலகத் துறை பராமரித்து வருகிறது. அந்த நூலகத்துக்கு பாகனேரி உ.இரு.மு. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சென்றனர்.
ஆறு முதல் 9-ம் வகுப்பு வரைபயிலும் மாணவிகள் நூற்றாண்டுகள் கடந்த பழமையான நூல்களைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். கதை, கவிதை, சான்றோரின் வாழ்க்கை வரலாறு போன்ற நூல்களை எடுத்து வாசித்தனர்.
உறுப்பினராக சேர்ந்தனர் நூல்களை தானமாக வழங்கியகாசி விஸ்வநாதனை நினைவு கூர்ந்தனர். அப்போது நூல்கள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பல மாணவிகள் ரூ.20 கட்டணம் செலுத்தி உடனடியாக நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பிரிட்டோ, ஆசிரியர்கள் செல்லப்பாண்டி, சுரேஷ், ஆசிரியைகள் பிரமிளா, தீபா, சந்தன வனிதா மணி கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT