Published : 18 Nov 2019 10:13 AM
Last Updated : 18 Nov 2019 10:13 AM
சென்னை
அண்ணாநகரில் உள்ளஅண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழாமற்றும் குழுக்களின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
விழாவில், பொருளியல்துறை முன்னாள் தலைவர் தமயந்தி, முன்னாள் மாணவியான கண் மருத்துவர் திவ்யாமனோகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 2019-2020-ம் கல்வி ஆண்டின் 19 குழுக்களின் ஆண்டறிக்கையை அவற்றின் செயலாளர்கள் சமர்ப்பித்தனர்.
இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய பண்புகளைசிறப்பு விருந்தினர்கள் தங்கள் உரையில்எடுத்துரைத்தனர். குழந்தைகள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள்வழங்கப்பட்டன. நிறைவாக, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT