Published : 18 Nov 2019 08:14 AM
Last Updated : 18 Nov 2019 08:14 AM
ராஜஸ்தான் மாநிலத்தில் செய்யப்படும் செருப்பு வகைகள் உலகஅளவில் மிகவும் பிரபலமானவை.
அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்காகவும், விபத்தில் கால்களை இழந்தவர்களுக்காகவும் செயற்கை கால் தயாரிப்பிலும் முன்னணியில் உள்ளது.
பகவான் மகாவீர் விக்லாங்சஹாயதா சமிதி (பிஎம்விஎஸ்எஸ்) அமைப்பின் கீழ் செயல்படும் ‘ஜெய்ப்பூர் காலணி’யின் திருவிழா அமெரிக்காவில் உள்ள கேப்பிடால் ஹில் மாகாணத்தில் வரும் 20-ம் தேதி தொடங்கவுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ‘இந்தியா-பசிபிக் தீவுகள் வளரும்மாநிலத் தலைவர்கள் கூட்டத்தில்’ பிரதமர் உரையாற்றும்போது, ‘மனிதநேயத்திற்கான இந்தியா'திட்டத்தின் கீழ், பசிபிக் நாடுகளில் ஜெய்ப்பூர் காலணியின் செயற்கை கால்கள் பொருத்துவதற்கான முகாம் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள்விழாவின் ஒரு பகுதியாக,இந்த திருவிழா அமெரிக்காவில்நடக்கவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT