Published : 18 Nov 2019 07:41 AM
Last Updated : 18 Nov 2019 07:41 AM

செய்திகள் சில வரிகளில்: குழந்தைகளுக்கான சிறந்த உணவு வகைகள்: யுனிசெப் நூல் வெளியீடு

குழந்தைகளுக்கான சிறந்த உணவு வகைகள்: யுனிசெப் நூல் வெளியீடு

புதுடெல்லி

குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் முக்கியமானவை உடல் பருமனும் ரத்தசோகையும்தான். இதை கட்டுபடுத்துவதற்கு ரூ.20-க்கும் குறைவான விலையில் சத்து மிகுந்த உணவுகளை கொடுத்தால் போதும்.

இந்நிலையில், ‘ஊத்தப்பம் முதல் முளை கட்டிய பயிரில் செய்யப்பட்ட பராத்தா (ஸ்பிரௌடட் தால்) வரை’ என்ற நூலை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ளது.

இந்த நூலில் ஊட்டச் சத்துள்ள உணவுகளை தயாரிப்பது குறித்த வழிமுறைகள், எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் பருமன், எடை குறைவு போன்ற பிரச்சினைகளை தீர்க்கலாம், ஒவ்வொரு உணவுக்கும் எவ்வளவு செலவாகும், அவற்றில் உள்ள ஊட்டச் சத்துக்கள் போன்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

புதுடெல்லி

நாடாளுமன்றத்தில் இன்று குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்த அமர்வில் ஜம்மு காஷ்மீர், பொருளாதார மந்தநிலை, வேலையின்மை மற்றும் குடியுரிமை மசோதா போன்ற முக்கிய அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்றுமுன்தினம் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும், ‘‘குளிர்கால கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த வேண்டும். அதற்காக அனைத்துப் பிரச்சினை குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது’’ என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நேற்று அழைப்பு விடுத்தார்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x