Published : 15 Nov 2019 12:15 PM
Last Updated : 15 Nov 2019 12:15 PM
பிரேசில் நாட்டின் பிரசிலியா நகரில் 5 நாடுகளின் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின் உட்பட 5 நாட்டுத் தலைவர்களும் பல்வேறு தொழிலதிபர்கள், வர்த்தகர்களுடன் நேற்று கலந்துரையாடினர்.
அப்போது புதின் கூறுகையில், ''தகவல் மற்றும் கணினி தொடர்பான வைரஸ் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ரஷ்யா அதிநவீனத் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.
எங்களது தகவல் தொடர்புத் துறையில் உள்ள வைரஸ் தடுப்பு திட்டத்தில் பங்கெடுக்க வேண்டும்.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களுக்குள் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம், தங்களுடைய நாட்டில் விநியோகஸ்தர்களை விரைந்து இனம் காண முடியும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT