Published : 15 Nov 2019 11:16 AM
Last Updated : 15 Nov 2019 11:16 AM

பிளஸ் 2 முடித்துவிட்டு சிஏ படிப்பில் சேருவது எப்படி? - மதுரை அல்-அமீன் பள்ளியில் கருத்தரங்கு

மதுரை

மதுரை கோ. புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் (சிஏ) பற்றிய கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சேக் நபி வரவேற்றார்.

தணிக்கையாளர் பாலசுப்ரமணியன் வேலைவாய்ப்பு, வருவாய், சமூக அந்தஸ்து, தனியார், வணிகத் துறைகளில் தணிக்கை செயல்பாடு, வருமான வரிக்கும், தணிக்கைக்குமான தொடர்பு பற்றி மாணவர்களுக்கு எளிமையாக விளக்கினார்.

உதவி தலைமை ஆசிரியர் ஜாகீர் உசேன், ரகமத்துல்லா ஆகியோர் பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சையது இப்ராகிம் மை தீன்பிச்சை, காஜா முகைதீன், நூருல்லாஹ் ஆகியோர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x