Published : 15 Nov 2019 10:53 AM
Last Updated : 15 Nov 2019 10:53 AM

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் கால் இறுதிச் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

ஹாங்காங்

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ளார். ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டி ஹாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடந்த 2-வது சுற்றுப் போட்டியில் இந்திய வீரரான கிடாம்பி காந்த், சகநாட்டு வீரரான சவுரப் வர்மாவை எதிர்கொண்டார். கடும் போட்டியைக் கொண்ட இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், 21-11 15-21 21-19 என்ற செட்கணக்கில் போராடி வென்றார்.

இதன்மூலம் இப்போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதிப் போட்டியில் சீனாவைச் சேர்ந்த சென் லாங்குடன் அவர் மோதவுள்ளார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x