Published : 15 Nov 2019 10:43 AM
Last Updated : 15 Nov 2019 10:43 AM
டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் நிஷாத் குமார் தகுதி பெற்றுள்லார்.
மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப், துபாய் நகரில் நடக்கிறது. இதில் நேற்று நடந்த உயரம் தாண்டும் போட்டியில் இந்திய வீரரான நிஷாத் குமார் 2 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். இதில் அமெரிக்க வீரரான ராட்ரிக் டவுன்செண்ட்-ராபட்ஸ் தங்கப் பதக்கத்தையும், சீனாவின் ஹாஞ்சி சென் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
இப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கவுள்ள பாராலிம்பிக் போட்டிக்கு நிஷாத் குமார் தகுதி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT