Published : 15 Nov 2019 10:04 AM
Last Updated : 15 Nov 2019 10:04 AM

செய்திகள் சில வரிகளில்: மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை மருத்துவப் பரிசோதனை

மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை மருத்துவப் பரிசோதனை

ஜம்மு

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காக ஆண்டுக்கு 2 முறை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கிரிஸ் சந்திர முர்மு மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தினார். மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கு சுகாதார அட்டையை வழங்கினார். மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்துவது குறித்தும் அறிவிப்பை வெளியிட்டார்.

குழந்தைகளின் உடல் பரிசோதனையின் போது பெற்றோர்கள் கண்டிப்பாக வர வேண்டும். அவர்களது உடல் நிலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என முர்மு பரிந்துரை செய்தார்.
இந்த சந்திப்பில் பள்ளிக் கல்வித் துறை ஆணையரும் செயலாளருமான சரிதா சவுகான் மற்றும் இதர மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். என்றார்.

-பிடிஐ

மழை குறைவாக இருக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை குறைவாகவே இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக ஒரு சில இடங்களைத் தவிர எங்கும் மழை பெய்யவில்லை. காற்று சுழற்சிகளும் உருவாகவில்லை. இதனால் பல நாட்கள் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் நேற்று கூறும்போது, ‘‘தமிழக பகுதியில் எங்கும் காற்று சுழற்சி இல்லை.

கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றில் ஈரப்பதமும் குறைவாக உள்ளது. அதனால் அடுத்த சில தினங்களுக்கு மழை வாய்ப்பு குறைவாகவே இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x