Published : 14 Nov 2019 08:10 AM
Last Updated : 14 Nov 2019 08:10 AM

செய்திகள் சில வரிகளில்: மீண்டும் அவசரநிலையை நெருங்கும் டெல்லி காற்று மாசு விவகாரம்

பன்றிகள் கொல்லப்பட்டதால் ரத்த சிவப்பாக மாறிய ஆறு

சியோல்

கொரிய எல்லையில் உள்ள ஆற்றின் அருகே அதிகளவில் பன்றிகள் வெட்டபட்டதால் ஆறு முழுவதும் சிவப்பு நிறமாக மாறியது. தென் கொரியாவின் சியோல் நகரில் பரவியுள்ள ‘ஆப்பிரிக்கன் ஸ்வைன்’ காய்ச்சலை கட்டுப்படுத்த பன்றிகளை வெட்டியுள்ளனர்.

இதுபோன்ற நோய்கள் ஏற்படத் தொடங்கியது முதல் இதுவரை 3,80,000 பன்றிகள் வெட்டப்பட்டுள்ளன. இது மனிதர்களைவிட பன்றிகளையே அதிகம் பாதிக்கிறது. எனவே, நோய் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயிரோடு இருக்கும் பன்றிகளை வெட்டப்படுகின்றன.

கடந்த வாரம் கன மழை பெய்தது. அப்போது வடகொரிய - தென் கொரிய எல்லையில் உள்ள ‘அமைதி பகுதி’யில் 47,000 பன்றிகள் வெட்டி புதைக்கப்பட்டன. இந்த இடத்தில்இருந்து பன்றிகளின் ரத்தம் அருகில் உள்ள இம்ஜின் ஆற்றில் கலந்தது. அதனால் ஆறு ரத்த சிவப்பாக மாறிவிட்டது என்று உள்ளூர் என்ஜிஓ.க்கள் தெரிவித்தனர்.-ஏஎப்பி

மீண்டும் அவசரநிலையை நெருங்கும் டெல்லி காற்று மாசு விவகாரம்

புதுடெல்லி

காற்றின் தர அளவின்படி(ஏக்யூஐ), காற்றில் உள்ள நுண் துகள்களின் அளவு 201-300 வரை இருந்தால் மோசமானநிலை. 301-400 வரை இருந்தால் மிக மோசம். 401-500 இருந்தால் மிகத்தீவிரம். 500 மேல் சென்றால் அவசரநிலை. அதன்படி, டெல்லியில் காற்று மாசு கடந்த அக்டோபர் 31-ம் தேதி 500-ஐ தாண்டியது. நவம்பர் 1-ம் தேதி 580ஐ தொட்டதால், மாநிலம் முழுவதும் ‘மருத்துவ அவசரநிலை’ அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், காற்றின் வேகம் உள்ளிட்ட சில காரணிகளால், காற்று மாசு 360ஆக குறைந்தது. இந்நிலையில், பனிப்பொழிவு மற்றும் காற்றின் வேகம் குறைவு காரணமாக நேற்று முன்தினம் டெல்லி முழுவதும் 414 ஆக இருந்த காற்று மாசு, மாலையில் 450க்கும் மேல் சென்றது. இதன் காரணமாக டெல்லியில் மீண்டும் அவசரநிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x