Published : 14 Nov 2019 07:58 AM
Last Updated : 14 Nov 2019 07:58 AM
சிட்னி
ஆஸ்திரேலியா நாட்டின் வடக்கில் உள்ள குயின்ஸ்லேட் பகுதியில் கடந்த வாரம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதற்கு ‘புஷ்பயர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தீயானது மெல்ல மெல்ல பரவி, சிட்னி நகர் அருகே வந்துக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், தீயை அணைக்கும்போது திடீரென ஒரு ஹெலிகாப்ட்டர் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்ட்டர் விமானி உயிர் தப்பினார்.
பாண்டா
உத்தரபிரதேச மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், பாபெரு நகர் மருத்துவ கண்காணிப்பாளர் முகமது அன்வர் என்ற உயர் அதிகாரி, 2 நாட்களுக்கு முன்பாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டெங்கு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதற்கிடையில் அவரது உடல்நலம் மிகவும் மோசமானது. மருத்துவ உயர் அதிகாரிக்கே டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெறுவதால், அப்பகுதி மக்கள் டெங்கு குறித்து அச்சத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT