Published : 13 Nov 2019 08:14 AM
Last Updated : 13 Nov 2019 08:14 AM

பயணிகளின் பைகளை வேறு நாட்டுக்கு அனுப்பிய விமான ஊழியர்

மேல் அதிகாரியின் மீது இருந்த விரக்தியில், 286 பயணிகளின் உடமைகளை வேறு நாட்டுக்கு அனுப்பிய ஊழியருக்கு 20 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த டே பூன்ஜெஹ்(66) என்பவர் அங்குள்ள விமான நிலையத்தில் பயணி களின் பைகளை சரியான விமானத்தில் ஏற்றும் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், பணிச் சுமை அதிகமாக உள்ளது என்றும் கூடுதலாக ஆட்களை எடுக்கவும் மேலிடத்தில் வலியுறுத்தி உள்ளார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இந்த விரக்தியில், 286 பயணிகளின் பைகளை சரியான விமானத்தில் ஏற்றாமல் வேறு நாட்டுகளுக்கு ஏற்றி அனுப்பி விட்டார். இதுகுறித்த வழக்கு சிங்கப்பூர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு, அவருக்கு 20 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x