Published : 12 Nov 2019 09:33 AM
Last Updated : 12 Nov 2019 09:33 AM

ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு தொடங்கியது

ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு கோவையில் தொடங்கியது.

நடப்பு கல்வி ஆண்டில் (2019-2020)கோவை மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, கோவை ராஜவீதியில் உள்ள துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.

இடமாறுதல் ஆணை

முதல்நாளான நேற்று அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், வருவாய் மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் பெறுவதற்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பங்கேற்று இடமாறுதல் பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், இடமாறுதல் ஆணைகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு கலந்தாய்வு நடைபெற்றது.

இன்று (நவ. 12) அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், வருவாய் மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் பெறுவதற்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதேபோல் அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு கலந்தாய்வு நடைபெறும். நாளை (நவ. 13) அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் பெறுவதற்கும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

நவ.14-ம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

நவ. 15-ம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் பெறுவதற்கும், கிரேடு-2 உடற்கல்வி இயக்குநர்கள் பதவி உயர்வு பெறுவதற்கும் கலந்தாய்வு நடைபெறும். நவ.16-ம் தேதி தையல் ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடபெறும் என பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x