Published : 12 Nov 2019 08:12 AM
Last Updated : 12 Nov 2019 08:12 AM

இந்தியாவில் நல்ல மழை பெய்து வருவதால் காற்று நகராமல் காட்டுத் தீ ஏற்பட்டது: ஆஸ்திரேலிய அரசு தரப்பில் விளக்கம்

மெல்போர்ன்

இந்தியாவில் பருவமழை முடிவதற்குதாமதமானதால்தான் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறுகிறது.

ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நியூ சௌத் வேல்ஸ்மற்றும் குவீன்ஸ்லாண்ட் மாகாணங்களில் வெள்ளிக்கிழமை முதல் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. வரலாறு காணாத காட்டுத்தீயில் இதுவரை 3 போ் உயிரிழந்தனா். இதுவரை, விவசாய மற்றும் காட்டுப்பகுதியில் உள்ள 8,50,000 ஹெக்டர் நிலங்கள் தீய்க்கு இரையாகியுள்ளது. இதன் காரணமாக மாநில எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ குறித்து அரசு சார்பில் ஆய்வு செய்யும் பேராசிரியர் ட்ரெண்ட் பென்மேன் கூறுகையில்,“உலகில் எங்கோ ஒரு மூலையில் ஏற்படும் மாற்றத்தால், 10,000 கி.மீ. தூரம் உள்ள ஒரு இடத்தில் பாதிப்பு ஏற்படும். கடந்த சில மாதங்களாக இந்தியாவில் சராசரியாக பதிவாகும் மழையை விட, மிக அதிகமாக மழை பெய்து வருகிறது.

ஆசியாவில் தென்மேற்கு பருவமழை

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும்செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் முடிவடையும். அப்போது காற்றானது, ஆஸ்திரேலியா நோக்கி நகரும். ஆனால் இந்த ஆண்டு காற்று நகராமல், இந்தியாவில் நல்ல மழை பெய்துவருகிறது. இதனால், ஆஸ்திரேலியாவில் டார்வின் பகுதி வறண்டு தீக்குள்ளாகியது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x