Published : 11 Nov 2019 08:02 AM
Last Updated : 11 Nov 2019 08:02 AM

டெல்லியில் காற்று மாசு கட்டுக்குள் வருகிறது

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் கடந்த 15 நாட்களாக காற்று மாசு அதிகமாக உள்ளது. இதனை சரி செய்ய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் காற்றின் வேகம் கடந்த சில நாட்களாக சாதகமாக (மணிக்கு 20 கி.மீ.) இருப்பதால் காற்று மாசு வேகமாக குறைந்து வருகிறது. டெல்லியில் நேற்று மாலை நிலவரப்படி காற்றில் உள்ள நுண்துகள்களின் அளவு 281 (காற்று தர அளவு - ஏக்யூஐ) ஆக (மோசம்) இருந்தது. இது கடந்த நாட்களில் 300-400 (மிக மோசம்) ஆக இருந்தது. அதேபோல், நவம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை 580 ஆக (அவசர நிலை) இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x