Published : 08 Nov 2019 10:49 AM
Last Updated : 08 Nov 2019 10:49 AM

நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று ஒரு மணி நேரம் செல்போனை அணைத்து வையுங்கள்: பெற்றோருக்கு வேண்டுகோள்

சென்னை

நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினத்தன்று ஒரு மணி நேரம் செல்போனை அணைத்து வைத்து,குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுமாறு பெற்றோருக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவ.14-ம்தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவில் குழந்தைகள் தின விழாகொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் குழந்தைகள் தினவிழாவை கொண்டாடுவது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஒரு சுற்றறிக்கை அனுப்பிஇருக்கிறார். அதில் பெற்றோர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோள்:குழந்தைகள் தினத்தன்று (நவ.14) இரவு 7.30 மணி முதல் 8.30 மணிவரை பெற்றோர் தங்களது செல்போனை அணைத்து வைத்து விட்டு, அந்த நேரம் முழுவதையும் குழந்தைகளுடன் செலவிடுங்கள். இதை அந்த ஒரு நாள் மட்டுமில்லாது, தினமும் அல்லது வாரத்தில் ஒரு நாள் கடைபிடிக்கலாம். இப்படிச் செய்வதால், குழந்தைகள் மகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன் இருப்பதுடன், பெற்றோர்-குழந்தைகளிடையே வலுவான உறவு உண்டாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x