Published : 08 Nov 2019 09:33 AM
Last Updated : 08 Nov 2019 09:33 AM

கூட்டுறவு வார விழாவையொட்டி கரூர் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டி

கரூர்

கரூர் மாவட்டத்தில் 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவ.14-ம் தேதி முதல் நவ.20-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நவ.9-ம் தேதிகூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, ஓவிய, கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன.

பேச்சு, கட்டுரைப் போட்டிகள்

6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஊரக கூட்டுறவுகள், 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கூட்டுறவே நாட்டுயர்வு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு கூட்டுறவுகளுக்குள் கூட்டுறவு ஆகிய தலைப்புகளில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெறும்.

6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளுக்கு ‘கூட்டுறவு’ என்ற தலைப்பின் கீழ் ஓவியப்போட்டி நடைபெறும்.

போட்டிகளில் பங்கு பெற விரும்பும் மாணவ, மாணவிகள், தங்களது பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நவ.8-ம் தேதி (இன்று வெள்ளிக்கிழமை) வரை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 04324 296138 என்றதொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x