Published : 07 Nov 2019 05:09 PM
Last Updated : 07 Nov 2019 05:09 PM

அரிச்சந்திரபுரம் அரசுப் பள்ளியில் நிலவேம்புக் கசாயம் வழங்கிய எம்எல்ஏ கலைவாணன்

அரிச்சந்திரபுரம்

அரிச்சந்திரபுரம் அரசுப் பள்ளிக்கு வந்த திருவாரூர் எம்எல்ஏ கலைவாணன், மாணவர்களுக்கு நிலவேம்புக் கசாயம் வழங்கினார். அதைத் தொடர்ந்து பள்ளியின் மூலிகைத் தோட்டத்தையும் அவர் பார்வையிட்டார்.

இதுகுறித்து மன்னார்குடி, அரிச்சந்திரபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கனகசபை விரிவாகப் பேசுகிறார். அவர் கூறும்போது, ''மழைக்காலம் என்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக இருந்தது. இதனால் டெங்கு காய்ச்சலைத் தடுக்க மாணவர்களுக்கு நிலவேம்புக் கசாயம் வழங்க முடிவெடுத்தோம்.

இதையடுத்து திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி எஸ்.கலைவாணன் எங்கள் பள்ளிக்கே நேரடியாக வந்து நிலவேம்புக் கசாயத்தை மாணவர்களுக்கு வழங்கினார்.

பள்ளியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றைப் பார்வையிட்டார். பரந்து விரிந்த காய்கறித் தோட்டம், மூலிகைத் தோட்டங்களையும் ஆர்வத்துடன் பார்வையிட்டார். உடன் வந்த மாணவ, மாணவிகளிடம் மூலிகைகள் குறித்து சில கேள்விகளைக் கேட்டார்

கிராமப்புறத்தில் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிகம் படிக்கும் பள்ளியில் இவ்வளவு வசதிகள் செய்யப்பட்டிருப்பது மன நிறைவை அளிப்பதாக அவர் நெகிழ்ந்தார். பள்ளிக்குத் தேவையான 2 வகுப்பறை கட்டிட வசதியையும் செய்து தருவதாக நம்பிக்கை அளித்துள்ளார்'' என்று ஆசிரியர் கனகசபை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x