Published : 07 Nov 2019 08:37 AM
Last Updated : 07 Nov 2019 08:37 AM
அரியலூர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் த.ரத்னா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் நடப்பு கல்வியாண்டில் (2019-2020) ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம்வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின (முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தம், பார்சி மற்றும்ஜைன மதம்) மாணவர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற் படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் மத்திய அரசால் வழங்கப்படுகறது.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிநவ.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள மாணவ,மாணவிகள் http://scholarships.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT