Published : 06 Nov 2019 04:46 PM
Last Updated : 06 Nov 2019 04:46 PM

இளைஞர் வேலைவாய்ப்பு: டாடா, டெக் மஹிந்திராவுடன் ஒடிசா ஒப்பந்தம்

ஒடிசா

இளைஞர்களின் திறனை வளர்த்தெடுத்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்க டாடா, டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களுடன் ஒடிசா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒடிசா தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி இயக்குநரகம் மற்றும் டாடா ஸ்ட்ரைவ் ஆகியவை இணைந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, அனைத்து அரசு ஐடிஐகளில் (49) படிக்கும் மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.

அதேபோல ஒடிசா தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் டெக் மஹிந்திராவுடன் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி டெக் மஹிந்திரா தன்னுடைய சர்வதேச நுகர்வோர்களுக்காக உலகளாவிய அளவிலான பிபிஓவை ஒடிசாவில் அமைக்க உள்ளது. இதன் மூலம் பிபிஓ துறையில் உள்ளூர் இளைஞர்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதுதவிர சிஇடி, பிஐயுடி கல்லூரிகள் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவற்றுக்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் ஆகிய துறைகளில் சிறப்பு மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒவ்வோர் ஆண்டும் 30 மாணவர்கள், 12 மாதங்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் ஆகிய சிறப்புப் பயிற்சி பெறுவர். இந்த ஒப்பந்த நிகழ்வின்போது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் உடன் இருந்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x