Published : 05 Nov 2019 08:01 AM
Last Updated : 05 Nov 2019 08:01 AM
துபாய்
துபாயில் மிகப்பெரிய அளவில் ஒரு வாரம் நடந்த சர்வதேச ரோபோட்டிக்ஸ் போட்டி நிறைவு பெற்றது.
முதல்முறையாக சர்வதேச அளவில் ரோபோட்டிக்ஸ் போட்டியை துபாய்நிர்வாகம் நடத்தியது. பொதுவாக ரோபோட்டிக்ஸ் துறையில் இதுபோன்ற போட்டியை அமெரிக்காதான் நடத்தி வந்தது. முதல்முறையாக அமெரிக்காவுக்கு வெளியே நடத்தப்பட்ட போட்டி இதுதான்.
இந்தப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் அக்டோபர் 25-ம்தேதி தொடங்கி நவ. 1-ம்தேதி முடிந்தது. உலக கடல் மாசுபாட்டின் தீர்வுக்காக புதிய தொழில்நுட்பம் என்ற தலைப்பில் நடந்த போட்டியில் 191 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு அக்டோபரில், உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களை வரவேற்கும் வகையில் பிரம்மாண்டமாக எக்ஸ்போ-2020 (கண்காட்சி) நடத்தவுள்ளதாக துபாய் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT