Published : 04 Nov 2019 10:49 AM
Last Updated : 04 Nov 2019 10:49 AM

பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம்

சென்னை

பள்ளி வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும்என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள் ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இதையடுத்து பருவ காலத்தில் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி அனைத்து வகை யான பள்ளிகளும் தங்கள் வளாகங் களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை கட்டாயம் அமைக்க வேண்டும். ஏற்கெனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் அவற்றை மேலும் மேம்படுத்த வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வையும் மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்எனகல்வித் துறை சுற்ற றிக்கை அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x