Published : 04 Nov 2019 08:23 AM
Last Updated : 04 Nov 2019 08:23 AM
ஹைதராபாத்:
இந்தியாவில் 21.5 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே கூறினார்.
காசநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே கலந்து கொண்டு பேசியதாவது:
நமது நாட்டில் சுமார் 21.5 லட்சம் காசநோய் நோயாளிகள் உள்ளனர். அவர்களை கண்காணித்து முறையான சிகிச்சை வழங்க, ஆதார் எண்ணுடன் நோயாளிகளின் விவரம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், காசநோய் உள்ளவர்கள் எளிதில் அரசின் நலத்திட்டங்களை பெறுகிறார்கள்.
அதேநேரத்தில், நாடு முழுவதும் சுமார் 5.5 லட்சம் பேர் காசநோய் குறித்து பதிவு செய்யாமல் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுடைய ஆதாருடன் இணைக்க முயற்சி செய்து வருகிறோம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
வரும் 2025-ம் ஆண்டுக்குள் தொற்றுநோய்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. உலகளவில் காசநோய் இருப்பவர்களில் 27 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர். இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 12,000 பேர் இறப்பதாக தெலங்கானா சுகாதார அமைச்சர் இ.ராஜேந்தர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT