Published : 31 Oct 2019 10:55 AM
Last Updated : 31 Oct 2019 10:55 AM

புயல் எச்சரிக்கை கூண்டுகளின் அர்த்தம் என்ன?

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்

புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் வெவ்வேறு எண்களில் புயல் கூண்டுகள் ஏற்றப்படும். பொதுவாக, புயல் காலங்களில் 1 முதல் 11 வரைபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். பகல் நேரங்களில் மூங்கில் கூண்டுகளால் ஏற்றப்படும். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் எரியவிடப்படும்.

ஒவ்வொரு எண்ணுக்குரிய புயல் எச்சரிக்கை கூண்டின் பொருள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என அர்த்தம். இதனால்துறைமுகம் ஏதும் பாதிக்கப்பட
வில்லை. ஆனால் சற்றே பலமாக காற்று வீசுகிறது என்று பொருள்.

இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையைக் கண்டால், துறை
முகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற வேண்டும்.

மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து. 3 மற்றும் 4-ம் எண் கூண்டுகள், துறை
முகத்தில் மோசமான வானிலை நிலவுவதைத் தெரியப்படுத்துகின் றன.

ஐந்தாம் எண் கூண்டு, புயல் உருவாகி இருப்பதைக் குறிக்கிறது. அத்தோடு துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கடக்கும் என்ப
தற்கான எச்சரிக்கை ஆகும்.

ஆறாம் எண் கூண்டு, 5 வது எண்ணின் எச்சரிக்கைதான். ஆனால் துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

ஏழாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்ச
ரிக்கை. 5, 6 மற்றும் 7-ம் எண் கூண்டுகள் துறைமுகத்துக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைக் குறிக்கிறது.

எட்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், 'மிகுந்த அபாயம்' என்று பொருள். அதாவது புயல், தீவிர புயலாகவோ அல்லது அதி
தீவிரப் புயலாகவோ உருவெடுத்துள்ளது. அப்போது துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

ஒன்பதாம் எண் புயல் கூண்டுக்கு, புயல், தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிரப் புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். மேலும்துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும்.

பத்தாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், அதி தீவிரப் புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்து
டனான தகவல் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள். 2018 நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலின்போது பாம்பனில் எட்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x