Published : 31 Oct 2019 10:22 AM
Last Updated : 31 Oct 2019 10:22 AM
புதுடெல்லி
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், தனது 12 அமைச்சர்களுடன் இன்று மாலை இந்தியா வருகிறார்.
இதுகுறித்து ஜெர்மன் தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் கூறுகையில், “ஜெர்மனி - இந்தியா இடையே மிக நீண்டகால உறவு உள்ளது. இந்நிலையில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் 31-ம் தேதி (இன்று) இந்தியா வருகிறார். அவருடன் 12 முக்கிய துறை அமைச்சர்களும் வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு, நிலையான வளர்ச்சி, நகர்ப்புற இயக்கம், வேளாண்மை மற்றும் கால்பந்து தொடர்பாக ஏஞ்சலா மெர்க்கல் - மோடி சந்திப்பு அமையும்.
அதேபோல், காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் ஏஞ்சலா - மோடி சந்திப்பின் போது பேசப்பட உள்ளது’’ என்றார். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவின் இந்திய பயணத்தின் போது 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT