Published : 31 Oct 2019 10:22 AM
Last Updated : 31 Oct 2019 10:22 AM

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இன்று வருகிறார்

புதுடெல்லி

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், தனது 12 அமைச்சர்களுடன் இன்று மாலை இந்தியா வருகிறார்.

இதுகுறித்து ஜெர்மன் தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் கூறுகையில், “ஜெர்மனி - இந்தியா இடையே மிக நீண்டகால உறவு உள்ளது. இந்நிலையில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் 31-ம் தேதி (இன்று) இந்தியா வருகிறார். அவருடன் 12 முக்கிய துறை அமைச்சர்களும் வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு, நிலையான வளர்ச்சி, நகர்ப்புற இயக்கம், வேளாண்மை மற்றும் கால்பந்து தொடர்பாக ஏஞ்சலா மெர்க்கல் - மோடி சந்திப்பு அமையும்.

அதேபோல், காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் ஏஞ்சலா - மோடி சந்திப்பின் போது பேசப்பட உள்ளது’’ என்றார். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவின் இந்திய பயணத்தின் போது 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x