Published : 31 Oct 2019 10:16 AM
Last Updated : 31 Oct 2019 10:16 AM

இன்று என்ன நாள்? - முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மறைந்த தினம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார். சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானவர். அன்றைய காலகட்ட அரசியலில் ஒரு பெண்ணாக தனது தனித்துவத்தை காட்டினார். இவரது ஆட்சிகாலம் என்பது 1966-ம் ஆண்டு முதல் 1977 வரை இருந்துள்ளது. 1977-ம் ஆண்டு அவசரநிலைக்கு பிறகு 1980-ல் மீண்டும் பிரதமர் ஆனார்.
இந்திரா காந்தி தனது ஆட்சிகாலத்தில் பெரும் ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார். 1984-ம் ஆண்டு நடந்த ‘ஆப்ரேஷன் புளூ ஸ்டார்’க்கு பிறகு, 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி இந்திரா தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x