அரசு பள்ளிகளில் யோகா பயிற்சி

அரசு பள்ளிகளில் யோகா பயிற்சி
Updated on
1 min read

சென்னை

தனியார் நிறுவனத்துடன் இணைந்து அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் கடந்த வாரம் அரசுமுறைசுற்றுப்பயணமாக மகாராஷ்டிரா
வுக்கு சென்றிருந்தார். அப்போது மும்பையில் உள்ள யோகா கலை பயிற்றுவிக்கும் புகழ்பெற்ற கைவல்யதாமா நிறுவனத்தை அவர் பார்வையிட்டார்.

தொடர்ந்து தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் யோகா மற்றும் மனவளர் கலைகளை செயல்படுத்துவதற்காக கைவல்யதாமா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, ‘‘மாணவர்களுக்கு யோகா கற்றுத்தரதமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து மும்பையை சேர்ந்த கைவல்யதாமா நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் யோகா, பிராணாயாமம் மற்றும் மனவளக்கலையைமாணவர்களுக்கு கற்றுத்தர அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் மனம்மற்றும் உடல்நலத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in