Published : 30 Oct 2019 07:55 AM
Last Updated : 30 Oct 2019 07:55 AM
புதுடெல்லி:
பெருநிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு விருது முதல் முறையாக இந்த ஆண்டு வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று நடந்தது. விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதையறிந்த குடியரசு தலைவர், தேசிய கீதம் முடிந்த பின்னர், பெண் போலீஸ் அருகில் சென்று என்ன நடந்தது என்று நலம் விசாரித்தார்.
பொதுவாக தேசிய கீதம் முடிந்த பின்னர், குடியரசுத் தலைவர் வேகமாக அரங்கை விட்டு வெளியேறி விடுவார். ஆனால், தற்போது குடியரசுத் தலைவரின் இந்த செயலை விழாவில் இருந்த அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT