Published : 25 Oct 2019 08:13 AM
Last Updated : 25 Oct 2019 08:13 AM

காஷ்மீரில் 81 நாட்களுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பியது

ஸ்ரீநகர்

ஜம்மு- காஷ்மீருக்கு, மத்திய அரசு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி, திரும்ப பெற்றப்பட்டது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 81 நாட்கள் பின்னர், காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முழுமையாக திரும்பி உள்ளது. இதுகுறித்து அரசு உயர் அதிகாரிஒருவர் கூறியது: “காஷ்மீரில் மார்கெட், வணிக வளாகம் முழுமையாக திறக்கப்பட்டுவிட்டது. தனியார் போக்குவரத்து முழுமையாகவும், அரசு போக்குவரத்து பாதியளவும் ஓடுகிறது. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.” என்றார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x