Published : 24 Oct 2019 07:58 AM
Last Updated : 24 Oct 2019 07:58 AM

ஒடிசாவில் கனமழையால் வெள்ளம் வெளிநாட்டு பறவைகள் வருகை தாமதம்

பிர்ஹாம்பூர்:

ஒடிசா மாநிலத்தின் ஏரிகளில் வெள்ளம் நிரம்பியுள்ளதால் வெளிநாட்டு பறவைகளின் வருகை தாமதமாகியுள்ளது.

ஒடிசா மாநில பிர்ஹாம்பூரில் உள்ள சிலிக்கா என்ற மிகப் பெரிய ஏரி உள்ளது. தமிழகத்துக்கு வேடந்தாங்கல் போன்று, ஒடிசாவுக்கு சிலிக்கா ஏரி, பறவைகளை கவரும் வகையில் அமைந்துள்ளது. இங்கு கிடைக்கும் உணவு மற்றும் பருவநிலை வெளிநாட்டு பறவைகளை கவர்வதால், அதிகமான பறவைகள் இந்த ஏரிக்கு வரும்.

கடந்த ஆண்டு சைபீரியா, கசகஸ்தான் போன்ற பல நாடுகளை சேர்ந்த 161 வகையான 10 லட்சத்து 47,868 பறவைகள் இந்த ஏரிக்கு வந்துள்ளன. பொதுவாக அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து இந்த ஏரிக்கு பறவைகள் வர தொடங்கும். தென்மேற்கு பருமழை மற்றும் ஃபானி புயலால் ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக சிலிக்கா ஏரி உட்பட பல ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளது. இதனால், வெளிநாட்டு பறவைகளின் வருகை தாமதமாகி உள்ளது. இதுகுறித்து, சிலிக்கா வனச்சரகத்தின் வனத்துறை அதிகாரி சான்ராட் கவுடா கூறுகையில், “ஏரியில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் பறவைகளுக்கு இரை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால்தான், வருகை தாமதமாகிறது. சில பறவைகள் ஏரியில் இறங்காமல் மேலேயே சுற்றிக் கொண்டும் இருக்கிறது. அநேகமாக இந்த மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாதம் முதலில் பறவைகள் வந்துவிடும். அதே நேரத்தில் பறவைகளை வேட்டையாடுவதை தவிர்க்க 19 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x