Published : 23 Oct 2019 08:50 AM
Last Updated : 23 Oct 2019 08:50 AM

அரசு வேலை பெற அசாம் மாநிலத்தில் புதிய கட்டுப்பாடு

குவாஹாத்தி

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு அரசாங்க வேலை வழங்கப்படமாட்டாது என்று அசாம் மாநில அமைச்சரவை முடிவெடுத்திருக்கிறது. 2021-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த சட்டம் அமல்படுத்தப்படும். திங்கள் அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவை அசாம் மாநில அரசு எடுத்துள்ளது.

'அசாம் மக்கள்தொகை மற்றும் பெண்கள் அதிகாரப் பகிர்வு கொள்கை' என்ற தீர்மானத்தை 2017-ம் ஆண்டில், சட்டமன்றத்தில் அசாம் அரசு நிறைவேற்றியது. இதன்படி இரண்டு குழந்தைகள் பெறுபவர்கள் மட்டுமே அரசு வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்கள். அரசு ஊழியர்களும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தீர்மானம் அமலுக்கு வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x