Published : 23 Oct 2019 07:11 AM
Last Updated : 23 Oct 2019 07:11 AM
போபால்
ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்கும் ‘உத்தவ்’ என்ற சர்வதேச நடன நிகழ்ச்சி மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் வரும் அக்.31-ம் தேதி நடக்கவுள்ளது.
இதுகுறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கேசவ் பாண்டே கூறுகையில், ‘‘உத்தவ் சர்வதேச நடன நிகழ்ச்சியானது தொடர்ந்து 16 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஸ்பெயின், இத்தாலி, இஸ்ரேல், ஈரான், ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த நடன கலைஞர்கள் மற்றும் இந்திய நடன கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இந்நிகழ்ச்சி குவாலியரின் கலை மற்றும் பாரம்பரியத்தை பிரதிலிக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT