Published : 22 Oct 2019 05:24 PM
Last Updated : 22 Oct 2019 05:24 PM
பனாஜி
சாவந்த் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை கோவா முதல்வர் பிரமோத் சந்தித்துப் பேசினார். கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க்யூஎஸ் இந்தியா 2019 உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேச மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கோவா சென்றார். அப்போது கோவா முதல்வர் பிரமோத், ரமேஷ் பொக்ரியாலைச் சந்தித்தார்.
இதுதொடர்பாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ''பனாஜியில் இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலைச் சந்தித்தேன். கல்வித் துறை தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசினோம்'' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் பொக்ரியாலும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது, ''கோவா வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய அரசு சார்பிலும் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பிலும் க்யூஎஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
'சிறந்த ஆசியாவை உருவாக்க கல்வித் துறையில் மேம்பட்ட தலைவர்களை உருவாக்குதல்' என்ற தலைப்பில் க்யூஎஸ் இந்தியா 2019 உச்சி மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஏஎன்ஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT