Published : 21 Oct 2019 09:10 AM
Last Updated : 21 Oct 2019 09:10 AM
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் 47- வது ஜவகர்லால் நேருஅறிவியல் கண்காட்சி பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தொடங்கிவைத்து பார்வையிட்டார். இதில், சுற்றுச்சூழல் மாசுபடுத்துதலை குறைப்பது,சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவது, மின் சக்தியை சிக்கனமாக பயன்படுத்துவது உட்பட 69 படைப்புகள் இடம் பெற்றிருந்தன. அறிவியல் பெருவிழா, அறிவியல் கருத்தரங்கம், கணிதக் கருத்தரங்கம், ஆசிரியர்களின் படைப்புகள் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 முதல் பிளஸ் 2 வரை மற்றொருபிரிவாகவும் கண்காட்சியில் படைப்புகளை வைத்திருந்தனர். விழாவில், நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்டஆசிரியர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி வரவேற்றார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் எஸ். கருணாநிதி, கே.முத்துச்சாமி, க.பால தண்டாயுதபாணி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, பள்ளி துணை ஆய்வாளர் ஆனந்த் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT