Published : 21 Oct 2019 09:06 AM
Last Updated : 21 Oct 2019 09:06 AM

செம்பட்டி அருகே ஊராட்சி பள்ளியில் சிலம்புக்கலை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள செ.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த சிலம்புக் கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் சிலம்புக்கலை குறித்துமாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே செ.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிலம்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, பரிசளிப்பு, நாடகம் வழி நன்னெறி வகுப்புகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்மேரி ஜூலியானா தலைமை வகித்தார்.

வாசிப்புப் போட்டி

ஆத்தூர் அமேசிங் ஸ்டார்சிலம்பு கலை பயிற்சிப் பள்ளி ஆசிரியர் செந்தில்குமார் தலைமையில் பள்ளி மாணவர்கள் சிலம்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். நாளிதழ்வாசிப்பு, இதுதொடர்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக கேள்விகளுக்குப் பதில் அளித்தமாணவி க.ஜெகதீஸ்வரி முதல்பரிசு பெற்றார். பரிசுகளை ‘நீரின்றி அமையாது உலகு’ ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பசுமைப் பழுவம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மாதவி ஆகியோர் வழங்கினர். நாடக ஆசிரியர் மதுரை செல்வம், நாடகக் கலை வாயிலாக நன்னெறி வகுப்பை நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிபொது அறிவுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராமு செய்திருந்தார். ஆசிரியர் ஜோஸ்பின்மேரி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x