Published : 21 Oct 2019 08:42 AM
Last Updated : 21 Oct 2019 08:42 AM
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தை நேற்று நிலநடுக்கம் உலுக்கியது.
காலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. எனினும் சம்பவ இடத்தில் நெருக்கடி நிலையோ, பொருட்கள் சேதமோ ஏற்படவில்லை என்று காந்தி நகரில் உள்ள நிலநடுக்கவியல் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
காலை 8.55 மணியளவில் பதிவான 3.2 ரிக்டர் நிலநடுக்கம், பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பலன்பூரின் வடமேற்கு பகுதியில் 30 கி.மீ. தொலைவில் மையம் கொண்டது.
ஜூன் மாதம் இதே பகுதியில் 150 கி.மீ. சுற்றளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.3 ரிக்டராக பதிவாகியது.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT