Published : 21 Oct 2019 08:20 AM
Last Updated : 21 Oct 2019 08:20 AM

பிலிப்பைன்ஸில் காந்தி சிலையை  திறந்து வைத்தார் ராம்நாத் கோவிந்த்

மணிலா

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிலிப்பைன்ஸின் மணிலாவில் உள்ள மிரியம் கல்லூரியின் அமைதிக் கல்வி மைய வளாகத்தில் காந்தி சிலையை நிறுவி உள்ளனர்.

இந்த மையத்துக்குச் சென்ற ராம்நாத் கோவிந்த் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்து பேசுகையில், ‘‘மகாத்மா காந்தி அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் சொந்தமானவர். இன்று வரை எங்கள் நிலையான வளர்ச்சிக்கும், அமைதி
பயணத்துக்கும் அவரது வழிகாட்டுதல் தொடர்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x