Published : 21 Oct 2019 08:05 AM
Last Updated : 21 Oct 2019 08:05 AM

தண்ணீர் சேமிப்புக்காக பெண்கள் உருவாக்கிய  உலகின் மிகப்பெரிய ‘W’ எழுத்து வடிவம்

புதுடெல்லி

தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி டெல்லியில் நேற்று 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து, உலகின் மிகப்பெரிய ‘W’ என்ற எழுத்தை உருவாக்கினர்.

உலகளவில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பல நகரங்களில் தண்ணீர் இல்லாத நிலை உருவாகும் என்று எச்சரிக்கப்படுகிறது. இந்நிலையில், தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி டெல்லியில் நேற்று பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கலை, கட்டிட கலை, வரைகலை, பொறியியல் துறைகளில் பெண்கள் நடத்தும் நிறுவனங்களின் சார்பில் செயல்படும் பெண்கள் அமைப்பு இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்களை ஒரே இடத்தில் அழைத்து, ஆங்கிலத்தில் ‘வாட்டர்’ என்ற சொல்லின் முதல் எழுத்தான ‘W’ வடிவத்தை உருவாக்கினர்.

இந்த வடிவம் உலகிலேயே மிகப் பெரிய எழுத்தாக அமைந்தது என்று தெரிவிக்கப்பட்டது. ‘Woman Water Warriors’ என்ற பெயரில் செயல்படும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதுகுறித்து வேத் அறக்கட்டளைத் தலைவர் வெர்டிகா திவிவேதி கூறும்போது, ‘‘உலகின் மிகப்பெரிய டபிள்யூ என்ற எழுத்தை பெண்கள் உருவாக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, ‘ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ஸில் இடம்பிடித்துள்ளது. இது எங்கள் அமைப்புக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. இதுபோல் எதிர்காலத்தில் மேலும் பலநிகழ்ச்சிகளை நடத்த இது தொடக்க மாக அமைந்துள்ளதாக கருதுகிறேன்’’ என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x